விஜயதசமி | தமிழகம் முழுவதும் நாளை அரசுப்பள்ளிகள் செயல்படும்!

விஜயதசமியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நாளை அரசுப்பள்ளிகள் செயல்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. நவராத்திரியின் நிறைவாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் கல்வியை தொடங்கும் வகையில், குழந்தைகளை முதல் முறையாக பள்ளியில் சேர்ப்பார்கள்.ஆகவே நாளைய தினம் அரசுப் பள்ளிகள் செயல்பட பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. மாணவர் சேர்க்கைக்காக அரசுப் பள்ளிகள் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More

50 கி.மீ தூரம் கடலில் நீந்தி சாதனை படைத்த ஆட்டிசம் பாதிக்கப்பட்ட சிறுவன்! 

சென்னையை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவரின் 12 வயது மகன் லக்சய், ஆட்டிசம் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி ஆவார். இவர் நீச்சலில் பல்வேறு சாதனைகள் படைத்து வரும் நிலையில், மற்றொரு சாதனை முயற்சியாக இலங்கையின் தலைமன்னாரிலிருந்து ராமேஸ்வரம் வரை நீந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு அனுமதி பெறப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து சிறுவன் லக்சய் உட்பட 28 பேர் கொண்ட குழுவினர் ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை தலைமன்னார் சென்ற நிலையில், சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தை 20 மணி நேரங்களில் நீந்தி சிறுவன்…

Read More

குலசேகரன்பட்டினத்தில் நாளை சூரசம்ஹாரம்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் பிரசித்தி பெற்ற தசரா திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன்  தொடங்கியது. விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கோவிலில் தசரா திருவிழாவின் 9-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 10 மணிக்கு அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருள  விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் 10-ம் திருநாளான நாளை…

Read More