கடந்த ஆண்டு காலிஸ்தான் பயங்கரவாதி நிஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஆத்திரமடைந்த கனடா அரசு கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை வெளியேற்றியது. இதற்கு பதிலடியாக டில்லியில் பணியாற்றிய அந்நாட்டு தூதரக அதிகாரி ஒருவரை மத்திய அரசு வெளியேற்றியது. அதிகாரிகளின் எண்ணிக்கையையும் குறைக்க உத்தரவிடப்பட்டது.
இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என கூறி கனடா நாட்டிற்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மாவை திரும்ப பெறுவதாக இந்தியா இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதையடுத்து இன்று மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், கனடா தூதரக அதிகாரிகள் 6 பேர் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ள்ளது.வரும் 19ம் தேதிக்குள் கனடா தூதரக அதிகாரிகள் 6 பேர் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
