தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் செய்துள்ள போஸ்டில், சென்னைக்கு வெளியே கடலில் இருந்த வலிமையான மேகங்கள் தீவிரம் அடைந்து வருகின்றன. இவை மேலும் வலிமை அடைந்து.. சிட்டியை நோக்கி நகர்ந்து வருகின்றன.வரப்போகும் மழை மிக நீண்ட, தீவிரமான மழையாக இருக்க போகிறது. இந்த மழை 250 மிமீ மழையாக இருக்க போகிறது. முக்கியமாக இரவு நேரத்தில் மழை தீவிரம் அடையும். இரவு நேரம் நெருங்குவதால் மேகங்கள் இன்னும் வலிமை அடையும் வாய்ப்புகள் உள்ளன.போன் மற்றும் லேப்டாப் சார்ஜிங் கட்டாயம்!!! அப்பார்ட்மென்டில் தண்ணிக்கு மோட்டார் போட்டு வெச்சுக்கோங்க !!! மிக முக்கிய தேவை இல்லை என்றால்.. எதற்காகவும் வெளியே வர வேண்டாம் !!!, என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறி உள்ளார்.
