
உலக செஸ் சாம்பியன் குகேஷ்
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற வீரர் குகேஷ்க்கு 5 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும்’ என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், சர்வதேச போட்டிகளில் விளையாடி, உலக சாம்பியன் என்ற பட்டத்தை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக, உலக சாம்பியன் பட்டம் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை குகேஷ் தற்போது பெற்றுள்ளார்.சரித்திரம் படைத்துள்ள செஸ் வீரருக்கு, நாடு முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.