அண்ணாமலை நவ., 23ல் சென்னை திரும்புகிறார்.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ஆக்ஸ்போர்டு பல்கலையில் மூன்று மாத அரசியல் புத்தாய்வு படிப்பில் சேர்ந்து படிக்க, கட்சித் தலைமை அனுமதியுடன் ஆக., 27ல் லண்டன் சென்றார். நவ., 23ல் சென்னை திரும்புகிறார்.அடுத்த ஆண்டு பிப்ரவரியில், மீண்டும் அரசியல் புத்தாய்வு படிப்புக்கான சான்றிதழ் பெறச் செல்வார்.இதனிடையே, தமிழக பா.ஜ.,வில் பல மாவட்ட நிர்வாகிகளை அண்ணாமலை மாற்றியமைக்க உள்ளார்.

Read More

விஜயதசமி | தமிழகம் முழுவதும் நாளை அரசுப்பள்ளிகள் செயல்படும்!

விஜயதசமியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நாளை அரசுப்பள்ளிகள் செயல்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. நவராத்திரியின் நிறைவாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் கல்வியை தொடங்கும் வகையில், குழந்தைகளை முதல் முறையாக பள்ளியில் சேர்ப்பார்கள்.ஆகவே நாளைய தினம் அரசுப் பள்ளிகள் செயல்பட பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. மாணவர் சேர்க்கைக்காக அரசுப் பள்ளிகள் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More

50 கி.மீ தூரம் கடலில் நீந்தி சாதனை படைத்த ஆட்டிசம் பாதிக்கப்பட்ட சிறுவன்! 

சென்னையை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவரின் 12 வயது மகன் லக்சய், ஆட்டிசம் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி ஆவார். இவர் நீச்சலில் பல்வேறு சாதனைகள் படைத்து வரும் நிலையில், மற்றொரு சாதனை முயற்சியாக இலங்கையின் தலைமன்னாரிலிருந்து ராமேஸ்வரம் வரை நீந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு அனுமதி பெறப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து சிறுவன் லக்சய் உட்பட 28 பேர் கொண்ட குழுவினர் ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை தலைமன்னார் சென்ற நிலையில், சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தை 20 மணி நேரங்களில் நீந்தி சிறுவன்…

Read More

குலசேகரன்பட்டினத்தில் நாளை சூரசம்ஹாரம்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் பிரசித்தி பெற்ற தசரா திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன்  தொடங்கியது. விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கோவிலில் தசரா திருவிழாவின் 9-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 10 மணிக்கு அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருள  விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் 10-ம் திருநாளான நாளை…

Read More

இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் பி.டி.உஷாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் பி.டி.உஷாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இச்சூழ்நிலையில், ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இந்திய ஒலிம்பிக் சங்கம் மேற்கொண்ட ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தினால் சங்கத்திற்கு ரூ.24 கோடி இழப்பு ஏற்பட்டதாக தணிக்கை அறிக்கையில் சி.ஏ.ஜி., குற்றம்சாட்டியது. இதனை பி.டி. உஷா மறுத்த நிலையில், அவரிடம் சி.ஏ.ஜி., விளக்கமும் கேட்டு இருந்தது. இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இணை செயலாளரும், அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவருமான கல்யாண் சவுபே கொண்டு வந்த தீர்மானத்தில், இந்திய ஒலிம்பிக்…

Read More

காரைக்குடி; டென்ஷனான மேயரால் பரபரப்பு

காரைக்குடி: மாநகராட்சி அலுவலகத்தில் முதல் மாமன்ற கூட்டத்தில் பரபரப்பு. அதிமுக கவுன்சிலர் ஊழல் புகார் கூற திமுக வினர் எதிர்க்க டென்ஷனான மேயர் முத்துதுரை அதிமுக கவுன்சிலரை ஒருமையில் பேசி நீ கிழிச்சதுலாம் போதும் முதல்ல வெளியே போயா என கூறியதுடன் பத்திரிக்கையாளர்களை வெளியேறச் சொல்ல அனைவரும் முகம் சுளிப்பு

Read More

இலக்கியத்திற்கான நோபல் பரிசு

 2024-ம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தென் கொரிய பெண் எழுத்தாளர் ஹான் காங்கிற்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மனித வாழ்க்கை குறித்த கவிதைக்காக ஹான் காங்கிற்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

வேதியியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசு 3 பேருக்கு பகிரப்பட்டுள்ளது. டேவிட் பெக்கர், டெமிஸ் ஹாசாபிஸ் மற்றும் ஜான் ஜம்பர் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. புரதத்தின் வடிவமைப்பு மற்றும் கட்டமைப்புக்கான ஆராய்ச்சிக்காகவே இந்த மூவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

இயற்பியலுக்கான நோபல் பரிசு நேற்று முன்தினம் (8.10.2024) அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக விஞ்ஞானி ஜான் ஜே ஹாப்பீல்டு மற்றும் கனடாவில் வசிக்கும் இங்கிலாந்து விஞ்ஞானி ஜெப்ரே ஹிண்டன் ஆகியோருக்கு இந்த பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக நோபல் பரிசு கமிட்டி அறிவித் துள்ளது. இயற்பியல் கருவிகளைப் பயன் படுத்தி இன்றைய சக்தி வாய்ந்த எந்திர கற்றலுக்கு அடிப்படையாக இருக்கும் முறைகளை உருவாக்கி யதற்காக இந்த பரிசு வழங்கப்படுவதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

பொதுத்துறை ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்; அறிவித்தது தமிழக அரசு

அக்.,31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால், அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போன்ஸ் அறிவிக்கப்பட்டது. இது குறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தமிழக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் பணிபுரியும் தகுதியுடைய ‘C’ மற்றும் ‘D’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு…

Read More