சுற்றுச்சூழல் அனுமதி வழங்கிய நிலையில் கோவையில் வேகம் எடுக்கும் ராணுவ தொழில் பூங்கா பணி

கோவை மாவட்டம் சூலூர் தாலுகாவிற்கு உட்பட்ட வாரப்பட்டி கிராமத்தில் 420 ஏக்கரில் ராணுவ விமானங்கள் தயாரிக்கும் தொழில் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு எடுத்து, இதற்கான மேம்பாட்டு பணிகளை தொழில் வளர்ச்சி கழகம் (டிட்கோ) தொடங்கி செயல்படுத்தி வருகிறது. ராணுவ தளவாடங்கள் தொழில் பூங்கா அமைக்க இருப்பது கோவை தொழில் துறையினர் இடையே வரவேற்பு பெற்று உள்ளது. இதற்காக தனியாரிடமிருந்து சுமார் 350 ஏக்கர் நிலத்தை டிட்கோ ஆர்ஜிதம் செய்துள்ளது. இந்த நிலத்துடன் சேர்த்து மொத்தம்…

Read More

சுதந்திர போராட்ட வீரர்கள் வெண்ணி காலாடி, குயிலி, எத்தலப்ப நாயக்கர் சிலைகளை, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தென்காசி மாவட்டத்தில், சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவன் படைத் தளபதி வெண்ணி காலாடிக்கும், சிவகங்கை மாவட்டத்தில் சுதந்திர போராட்ட வீராங்கனை குயிலிக்கும், செய்தி மக்கள் தொடர்பு துறை வாயிலாக, 50 லட்சம் ரூபாய் செலவில் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.திருப்பூர் மாவட்டத்தில் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கருக்கு, 2.60 கோடி ரூபாய் செலவில் சிலை மற்றும் அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றை, தலைமை செயலகத்தில் இருந்தபடி, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Read More

ரத்தன் டாடா காலமானார்- நாடு தழுவிய இரங்கல்

புகழ்பெற்ற தொழிலதிபரும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான ரத்தன் டாடா (86) நேற்று (அக்., 09) இரவு மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் காலமானார். வணிகம் மற்றும் சமூகத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பை நினைவுகூர்ந்து தேசிய அளவில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Read More

டெல்லி முதல்வரின் இல்லத்திற்கு சீல்- வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட அதிஷி ?

முதல்வர் ஆதிஷியை அரசு பங்களாவிலருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்ற துணை நிலை கவர்னர் வி. சக்சேனா உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பா.ஜ., கொடுத்த அழுத்தம் காரணமாகவே துணை நிலை கவர்னர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும், அவரது அலுவலகம் சீல் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரது இல்லம் சீல் வைக்கப்பட்டது.நாட்டில் முதன் முறையாக முதல்வரை கட்டாயப்படுத்தி அரசு பங்களாவை காலிசெய்ய உத்தரவிட்ட சம்பவம் நடந்துள்ளதாக முதல்வர் அலுவலகம் துணை நிலை கவர்னர் மீது புகார்…

Read More

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் தொடர்கிறது; சி.ஐ.டி.யு., சங்கத்திற்கு அங்கீகாரம் அளிக்கும் வரை போராட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில், சாம்சங் நிறுவனத்தின் தொழிற்சாலை இயங்கி வருகிறது. அங்கு, பணியாற்றும் தொழிலாளர்களில் ஒரு பகுதியினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் அளித்தல் உட்பட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்., 9ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை கைவிட, தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் அரசு தரப்பில் ஏழு கட்ட பேச்சு நடத்தியும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சி.ஐ.டி.யு., சங்கத்திற்கு…

Read More

‘சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஹோமியோபதி மருந்துகள் தீராத நோய்களையும் தீர்க்கும்’ என்பது போன்ற விளம்பரங்களை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, மத்திய ஆயுஷ் அமைச்சகம் எச்சரித்துள்ளது.

ஆயுஷ் அமைச்சகம் எந்த ஒரு சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஹோமியோபதி நிறுவனங்களின் மருந்துகளுக்கு அங்கீகாரமோ, விற்பனை செய்யும் உரிமமோ வழங்குவதில்லை.மருந்து மற்றும் அழகு சாதன பொருட்களுக்கான சட்டப்படி, விற்பனை அனுமதியை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மட்டுமே வழங்கும்.‘ஆயுர்வேதா, சித்தா உள்ளிட்ட மருந்துகள் அற்புதங்களை நிகழ்த்தும், தீர்க்க முடியாத நோய்களையும் தீர்க்கும்’ என்பது போன்று விளம்பரங்கள் செய்வது சட்டப்படி குற்றம்.

Read More

12 மாவட்டங்களில் 46,931 வேலை வாய்ப்புகள்.! மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு.! 

அமைச்சரவைக் கூட்டத்தில், மின்னணுப் பொருட்கள், பாதுகாப்பு, மருத்துவம், தோல் அல்லாத காலணிகள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மின் வாகனங்கள், தொலைத்தொடர்பு எனப் பல்வேறு துறைகளில் பரவலாக 12 மாவட்டங்களில், 46,931 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய ரூ.38,698.8 கோடி மதிப்பிலான 14 முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.என அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

Read More

ஹரியானா தேர்தல் : மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி..!

ஜூலானா சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நட்சத்திர வேட்பாளரும், ஒலிம்பிக் வீராங்கனையுமான வினேஷ் போகத் காலை முதல் முன்னிலை பெற்று வந்தார். அதன்பின், சிறுது நேரம் பின்னடைவை சந்தித்த அவர் அதன்பிறகு மீண்டும் முன்னிலைப் பெற்று வந்தார். இந்த நிலையில், தற்போது காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத் 6,000-திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் யோகேஷ் குமாரை வீழ்த்தி வினேஷ் போகத் வெற்றி பெற்றுள்ளார்.

Read More

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை தொடங்கி வைத்ததால் கட்சி பொறுப்புகளில் இருந்து தளவாய்சுந்தரம் எம்எல்ஏ நீக்கம்: எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை

நாகர்கோவில் அருகே ஈசாந்திமங்கலத்தில் ஆர்.எஸ்.எஸ். சார்பில், ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை தளவாய்சுந்தரம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதிமுக, பாஜ இடையே கூட்டணி உடைந்து, தற்போது இரு கட்சிகளை சேர்ந்தவர்களும் மாறி, மாறி விமர்சித்து வரும் நிலையில், ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பா.ஜ.வுடன் இனி கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் பேசி வரும் நிலையில், ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை அவர் தொடங்கி…

Read More

தமிழகம் முழுவதும் வரும் 15ம் தேதி 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

 பருவமழை காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் வரும் 15ம் தேதி 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. சென்னையில் மட்டும் 100 இடங்களிலும் தமிழகத்தில் உள்ள மற்ற இடங்களில் 900 மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள மகத்தான திட்டம் என்றால் அது மக்களை தேடி மருத்துவம் ஆகும். 

Read More