சமத்துவ நெறியைப் போற்றுவோம்: வள்ளலார் பிறந்தநாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

அருட்பிரகாச வள்ளலாரின் 202-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் அருட்பிரகாச வள்ளலாரின் பிறந்தநாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் நமது அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற ஆண்டு முதலாக, “தனிப்பெருங்கருணை நாள்” எனக் கொண்டாடி வரும் அருட்பிரகாச வள்ளலாரின் பிறந்தநாள் இன்று! “உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்! “மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்!” என அவர் காட்டிய சமரச சுத்த வழியை எந்நாளும் பின்பற்றுவோம்! உயிர்களிடத்து வேற்றுமையும், ஏற்றத்தாழ்வும் காணாத…

Read More

இந்திய மகளிர் அணி முதல் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்துள்ளது.

20 ஓவர் உலகக்கோப்பைத் தொடரின் 4-ஆவது போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் இன்று(அக். 4) பலப்பரீட்சை நடத்தின. துபையில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 160 ரன்கள் திரட்டியது.இதையடுத்து இந்திய மகளிர் அணி 19 ஓவர்களில் 102 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியைத் தழுவியது. இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Read More

விமானப்படை சாகசம்: மெரீனாவில் நாளை போக்குவரத்து மாற்றம்: பாதுகாப்பு பணியில் 8 ஆயிரம் போலீஸாா்

சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய விமானப்படையின் 92-வது நிறுவன தினத்தையொட்டி, அக்டோபா் 6-ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) சென்னை மெரீனா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. மெரீனா கடற்கரையில் 21 ஆண்டுகளுக்குப் பின்னா் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், லட்சக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதையொட்டி, அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன பொதுமக்கள் சிரமமின்றி மெரீனா வந்து செல்லவும், அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்கவும், அமைதியான முறையில் பொதுமக்கள் சாகச நிகழ்ச்சியைக் காணவும் வசதியாக…

Read More

பசும்பொன்னில் அக்.29, 30ல் நடக்கும் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை

பசும்பொன்னில் அக்.29, 30ல் நடக்கும் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாதொடர்பான ஆலோசனை கூட்டம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவகலத்தில் நேற்று நடந்தது. தலைமை வகித்த கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கூறியதாவது.மாவட்டத்தில் தற்போது அமலில் உள்ள பிரிவு 163(1) தடை உத்திரவின் படிபசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைவிழாவிற்கு வாடகை வாகனங்கள் மற்றும் டூவீலர்கள், டிராக்டர், ஆட்டோ, சரக்கு வாகனம் ஆகியதிறந்த வெளிவாகனங்களில் வந்து கலந்து கொள்ள அனுமதி இல்லை. சொந்த நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்போர் சம்பந்தப்பட்ட டி.எஸ்.பி.,…

Read More

ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்

ஹரியானாவில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று (அக்., 05) ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. 2 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். ஹரியானா முதலமைச்சர் நயாப் சிங் சைனி, காங்கிரஸ் கட்சியின் பூபிந்தர் சிங் மற்றும் 101 பெண்கள் உட்பட 1,031 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பதிவாகும் வாக்குகள் வரும் அக்., 8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

Read More

முதலமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகள் தொடங்கியது.

சென்னை: சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகள் தொடங்கியது. முதலமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகளை துணை முதலமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார். விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்றுக் கொண்டார். முதலமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகள் அக்.24 வரை நடைபெற உள்ளன.

Read More

அ.தி.மு.க. 17-ம் தேதி 53-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது

அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் , கழக நிறுவனத் தலைவர் `பொன்மனச் செம்மல்’ புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால்போற்றி வளர்க்கப்பட்டு, பல்வேறு வரலாற்றுச் சாதனைகளைப் படைத்திட்ட மாபெரும் மக்கள் பேரியக்கமாம் `அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ 17.10.2024வியாழக்கிழமையன்று 53-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, 17.10.2024 முதல் 20.10.2024 வரை நான்கு நாட்கள் `அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 53-ஆவது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள்’ கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும்…

Read More

பாஸ்போர்ட் சேவை இணையதளம் 4 நாட்கள் இயங்காது

பாஸ்போர்ட் சேவை இணையதளம் இன்று இரவு 8 மணி முதல் திங்கள் காலை 6 மணி வரை இயங்காது என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. passportindia.gov.in என்ற பாஸ்போர்ட் சேவை இணையதளத்தில் தொழில்நுட்ப பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், ஆவண சரிபார்ப்பு நேர்க்காணலுக்கு முன்பதிவு செய்திருந்த அனைவரும் நேரமுள்ள பிற நாள்களில் மாற்றி அமைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More

சுசீலா மேத்தாவுக்கு கலை வித்தகர் விருது

முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, வழக்கமாக வழங்கப்படும் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுடன், சிறப்பினமாகப் பெண்மையைப் போற்றும் வகையில் இந்த ஆண்டு கூடுதலாக ஒரு பெண் திரைக்கலைஞருக்கும் இந்த விருதினை வழங்கிச் சிறப்பித்திட முதல்-அமைச்சர் 11.07.2024 அன்று உத்தரவிட்டிருந்தார்.அதன்படி, திரையுலகில் 20,000க்கும் மேற்பட்ட பலமொழிப் பாடல்களைப் பாடியவரும், “தென்னிந்தியாவின் இசைக்குயில்” என்றும், “மெல்லிசை அரசி” என்றும் பாராட்டப்படதிரைப்படப் பின்னணிப் பாடகி பி.சுசீலாவுக்கும், தமிழ்ப் பேராசிரியரும், புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்தவரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான…

Read More

கடைசி பட பூஜையில் விஜய்

எச்.வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் தனது 69வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்துடன் அவர் சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியலில் பயணிக்க இருப்பதால் இதுவே அவரது கடைசி படமாக பார்க்கப்படுகிறது. பெங்களூருவை சேர்ந்த கேவிஎன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.இப்படத்தில் ஹிந்தி நடிகர் பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரியாமணி, பிரகாஷ்ராஜ், நரைன், மமிதா பைஜூ, கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் நடிப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த நிலையில் இன்று (அக்.,4)…

Read More