ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை!!

ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் போராட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் சாலை மறியல் போராட்டத்துக்கு தடை கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அரசு ஊழியர்கள் கோரிக்கை குறித்து பரிசீலிக்க 4 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பு பேச்சுவார்த்தை முடியும் வரை ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் எந்தவித போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது

Read More

அரசு ஊழியர்கள் சங்கத்தின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

சென்னை: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சங்கம் அறிவித்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தலைமை செயலகத்தில் அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கை குறித்து சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சுமூக முடிவு எட்டப்பட்ட நிலையில், போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Read More

மாமல்லபுரத்தில் பிப்.,26ல் த.வெ.க., 2ம் ஆண்டு விழா

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா,துவக்க விழாவை ஒருங்கிணைக்க 18 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் பிப்ரவரி 26ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில், கட்சி நிர்வாகிகள் உட்பட 2,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு, மாவட்ட செயலர்களை வரவழைத்து, கட்சி சார்பில் அனுமதி சீட்டுகள் நேற்று வழங்கப்பட்டன. துவக்க விழாவில் பங்கேற்கும் கட்சியினருக்கு, கியூ.ஆர்., ரகசிய குறியீடுடன் அடையாள அட்டை வழங்கப்பட்டு…

Read More

திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம்?

திருப்பரங்குன்றம் மலையில், வரலாற்று ரீதியாகவும், கலாசார ரீதியாகவும், இரு சமூகங்களின் சடங்குகளும் அமைதியான முறையில் நடைபெற்று வந்துள்ளன. அவற்றின் நோக்கம் பிற மதங்களின் புனிதத்தைக் களங்கப்படுத்துவது அல்ல. கடந்த கால நீதிமன்ற தீர்ப்புகளும் அதைத் தெளிவுபடுத்தியுள்ளன. 1920இல் மதுரையின் விசாரணை நீதிமன்றத்தில், திருப்பரங்குன்றம் தேவஸ்தானம் சார்பில் தொடரப்பட்ட ஒரு வழக்குதான் இதன் தொடக்கப்புள்ளி. 1923 ஆகஸ்ட் 23 அன்று தீர்ப்பளித்தார். பிரிட்டிஷ் அரசின் கோரிக்கையான மலையின் ஆக்கிரமிக்கப்படாத பகுதிகள் அரசாங்க சொத்து (அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்கள்)…

Read More

தமிழகத்துக்கு மத்திய அரசு செய்த அநீதி

சென்னை: தமிழகத்துக்கு மத்திய அரசு செய்து வரும் அநீதிக்கு எல்லையே இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தேசியக் கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக உள்ள PM SHRI திட்டத்தில் இணைய தமிழ்நாடு அரசு மறுத்ததால் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை மத்திய அரசு பிற மாநிலங்களுக்கு மாற்றிவிட்டதாக வெளியான செய்தியை டேக் செய்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டுக்கு எதிரான ஒன்றிய பா.ஜ.க. அரசின் அட்டூழிய மனப்பான்மைக்கு அளவே இல்லாமல்…

Read More

மத்திய பட்ஜெட் 2025

புதிய வரி விதிப்பு முறையில் ரூ. 12 லட்சம் வரை வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. இது முன்பு ரூ.7 லட்சமாக இருந்தது. வருமானம் ரூ. 12 லட்சம் வரை உள்ளவர்களுக்கு இந்த மாற்றம். புதிய வருமான வரி வரிவிதிப்பு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.இந்த திருத்தப்பட்ட முறையின் கீழ், ஆண்டு வருமானம் ரூ.4 லட்சம் வரை உள்ள நபர்கள் எந்த வருமான வரியும் செலுத்த வேண்டியதில்லை. ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 5% வரி…

Read More