இந்த முறை, இறுதிப் போட்டியில் களமிறங்கும் அணிகள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) ஆகும். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி குவாலிஃபையர் 1 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி நேரடியாக இறுதிக்கு முன்னேறியது. பஞ்சாப் கிங்ஸ் அணி, குவாலிஃபையர் 2 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி, இறுதிப் போட்டியில் ஆர்சிபி-யை எதிர்கொள்ளத் தயாராக உள்ளது. இந்த முக்கியமான இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறுகிறது. கோப்பைதான் மிகப்பெரிய ஈர்ப்பாக இருந்தாலும், தனிப்பட்ட வீரர்களுக்கான மைல்கற்களும், ரொக்கப் பரிசுகளும் இந்த சீசனின் சிறப்பம்சமாக உள்ளன. பரிசுகள்: வெற்றி பெறும் அணிக்கு ரூ.20 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.13 கோடி கிடைக்கும். பிளேஆஃப்களில் தோல்வியடைந்த அணிகளான குவாலிஃபையர் மற்றும் எலிமினேட்டர் போட்டிகளில் வெளியேறிய அணிகளுக்கும் முறையே ரூ.7 கோடி மற்றும் ரூ.6.5 கோடி ரொக்கப் பரிசுகள் காத்திருக்கின்றன. ஐபிஎல் 2025 தனிப்பட்ட விருதுகளுக்கான பரிசுத் தொகை: ஆரஞ்சு கேப்: ரூ.10 லட்சம் ஊதா கேப்: ரூ.10 லட்சம் வளர்ந்து வரும் வீரர் (Emerging Player): ரூ.20 லட்சம் மிகவும் மதிப்புமிக்க வீரர் (Most Valuable Player): ரூ.10 லட்சம்.சூப்பர் ஸ்ட்ரைக்கர் (Super Striker): ரூ.10 லட்சம் பவர் பிளேயர் (Power Player): ரூ.10 லட்சம் அதிக சிக்ஸர்கள் (Maximum Sixes): ரூ.10 லட்சம் கேம் சேஞ்சர் (Game Changer): ரூ.10 லட்சம்.
