ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 19-ந்தேதி பாகிஸ்தானில் தொடங்கியது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி, பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டது.8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் அரையிறுதி சுற்று முடிவில் இந்தியாவும், நியூசிலாந்தும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.இந்த நிலையில் ஐ.சி.சி. மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இந்தியா- நியூசிலாந்து இடையிலான இறுதிப்போட்டி துபாயில் இன்று நடக்கிறது. இந்த தொடரில் தோல்வியே சந்திக்காத இந்திய அணி, ஒரே ஒரு லீக் ஆட்டத்தில் மட்டும் தோல்வி கண்ட நியூசிலாந்தை (இந்தியாவுக்கு எதிராக), வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் உள்ளது.இந்தியாவின் சுழலுக்கும், நியூசிலாந்தின் பேட்டிங்குக்கும் இடையிலான மோதலாக இது பார்க்கப்படுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
