ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. மொத்தம் 11 சுற்றுகள் கொண்ட போட்டியில் 9வது சுற்றில் இந்திய அணி கடந்த முறை தங்கம் வென்ற உஸ்பெகிஸ்தானை எதிர்கொண்டது. கடும் போராட்டங்களுக்கு பின்னர் இந்த போட்டி டிராவானது. 8 சுற்றுகளில் வாகை சூடிய இந்தியா முதல் முறையாக டிரா செய்தது.10வது சுற்றில் இந்தியாவின் அர்ஜூன் எரிகாசி, அமெரிக்காவின் லெனியர் டோமின்குயிசை எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த போட்டியில் அர்ஜூன் வெற்றியை தம்வசப்படுத்திக் கொண்டார். இதன் மூலம் இந்திய அணி செஸ் ஒலிம்பியாட் தொடரில் 19 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் சீனா 17 புள்ளிகளுடன் இருக்கிறது.
