லெபனான்: தரைவழித் தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல் – போர் நிறுத்தம் கோரும் அமெரிக்கா, பிரான்ஸ்

Spread the love

 இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா போராளிகள் உடனடியாக 21 நாள் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு இதுபற்றி கூறுகையில்,’ போர் நிறுத்தம் இல்லை’ என்று உறுதிபட தெரிவித்தார். நெத்தன்யாகு அமெரிக்கா சென்றாலும் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா குழுக்களை குறிவைத்தும், காசாவிலும் இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி வருவதாக இஸ்ரேல் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் அமெரிக்கா உள்ளிட்ட போர் நிறுத்த அழைப்புக்கு ஹிஸ்புல்லா போராளிகளும் எந்தவித பதிலும் தெரிவிக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *