நவராத்திரியின் ஒன்பது நாட்களும் அம்பிகையை ஒன்பது விதமான வடிவங்களில் வழிபடுவது வழக்கம். இதில் முதல் மூன்று நாட்கள் அம்பிகையை ஆதிசக்தியாகவும், அடுத்த மூன்று நாட்கள் அம்பிகையை செல்வங்களை அருளும் மகாலட்சுமியின் அம்சமாகவும், கடைசி மூன்று நாட்கள் கலைகளையும், ஞானத்தையும் அருளக் கூடிய கலைமகளின் வடிவமாகவும் வழிபடுகிறோம். இதில் அம்பிகை, அசுரனை வதம் செய்வதற்கு முன் பல்வேறு தெய்வங்களிடம் இருந்து பெற்ற ஆயுதங்களை வைத்து பூஜை செய்த நாளையே ஆயுத பூஜையாக, நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் கொண்டாடுகிறோம். அம்பிகை, போரில் வெற்றி பெற்ற தினத்தை விஜயதசமியாக பத்தாவது நாளில் கொண்டாடுகிறோம்.
