சென்னை மாநகராட்சி முழுவதும், அனைத்து வார்டுகளிலும், உணவு சமைக்கப்பட்டு, மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் மேற்பார்வையில் பொதுமக்களுக்கு உணவு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் மண்டலம் வாரியாக அமைக்கப்பட்டுள்ள உணவு கூடங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உணவு தேவைப்படுபவர்கள் இங்கு தொடர்பு கொண்டால் உணவு வழங்கப்படும். 3 வேளையும் உணவு வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
