எம்.பி.பி.எஸ்.,பி.டி.எஸ், சேர மறுத்த 1,143 பேர் ஏன்?

Spread the love

சென்னை : மாநில ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., படிப்பில் சேர்ந்த மாணவர்கள், அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டில் மற்ற மாநிலங்களில் சேர்ந்ததால், 1143 சீட்டுகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன.சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு, 13.5 லட்சம் ரூபாய்; அரசு ஒதுக்கீட்டுக்கு, 4.5 லட்சம் ரூபாய், மாநில அரசு கட்டணமாக நிர்ணயித்துள்ளது; ஆனால், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 19 லட்சம் ரூபாய்; அரசு ஒதுக்கீட்டுக்கு 11 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.
இதனால், சுயநிதி கல்லுாரிகளில் சேரும் மாணவர்கள், அகில இந்திய ஒதுக்கீட்டில், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இடங்கள் பெற்ற பின், தமிழக கல்லுாரிகளை கைவிடுகின்றனர்.அதேபோல், அரசு மருத்துவக் கல்லுாரிகளில் சேர்ந்த மாணவர்களும், எய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலையில் இடம் பெற்று சென்றுள்ளனர்.
அதன்படி, அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 59 எம்.பி.பி.எஸ்., – 62 பி.டி.எஸ்., மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில், 503 எம்.பி.பி.எஸ்., – 519 பி.டி.எஸ்., என, மொத்தம் 1143 இடங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *