தமிழகத்தில் சென்னை, காரைக்கால் என, இரு இடங்களில் மட்டுமே, இந்திய வானிலை துறையின் ரேடார்கள் உள்ளன. இவற்றின் வழியே புயல், காற்றின் வேகம், மழை குறித்த துல்லிய தகவல்கள் பெறப்படுகின்றன. இருப்பினும், தமிழக தென்மாவட்டங்கள், உள்மாவட்டங்களில் பருவ மழை காலத்தில், மேக வெடிப்பு போன்ற காரணங்களால், குறைந்த நேரத்தில் அதிக மழை கொட்ட வாய்ப்புள்ள விபரங்களை அறிய முடியவில்லை. இந்திய வானிலை துறையின், சென்னை மண்டல அலுவலக அதிகாரிகளுடன் ஆலோசித்து, இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சேலம் மாவட்டம், ஏற்காடு, ராமநாதபுரம் என, இரு இடங்களில், நவீன, ‘சி பேண்ட் டாப்ளர் ரேடார்கள்’ 56 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளன.
