ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது ரந்தம்பூர் தேசிய பூங்கா. இங்குள்ள புலிகள் காப்பகத்தில் ஓராண்டில் கிட்டத்தட்ட 25 புலிகள் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விவரத்தை தலைமை வனவிலங்கு காப்பாளர் பவன்குமார் கூறி உள்ளார்.
இந்த புலிகள் காப்பகத்தில் மட்டும் 75 புலிகள் உள்ளன. இதில் மூன்றில் ஒரு பங்கு புலிகள் மாயமாகி இருப்பது ராஜஸ்தான் மாநில மக்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைடுத்து, மாநில அரசு விசாரணை குழு ஒன்றை அமைத்து இருக்கிறது.
