தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் காந்திராஜன் தலைமையில் குழு உறுப்பினர்கள் நேற்று காலை தனிப்படகில் திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் பாறை இடையே ரூ37 கோடியில் நடந்து வரும் கண்ணாடி பால பணிகளை ஆய்வு செய்தனர். பின்னர் குழு தலைவர் காந்திராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: இயற்கை சீற்றங்கள் குறைவாக இருந்தால் வரும் ஜனவரி மாதத்திற்குள் பணிகளை முடித்துவிடலாம். அதன் பின்னர் முதலமைச்சரால் திறந்து வைக்கப்படும்.
