டாடா – சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்’ கூட்டு நிறுவனமான ‘விஸ்தாரா’ விமான நிறுவனம், வருகிற இன்று (நவ. 12ம் தேதி )முதல் ஏர் இந்தியாவுடன் இணைகிறது.ஏர் இந்தியாவில், விஸ்தாரா இணைந்ததும், அதில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்சின் பங்கு 25.10 சதவீதமாக இருக்கும் என முடிவு செய்யப்பட்டது, இதையடுத்து, அன்னிய நேரடி முதலீடுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, நேற்றுடன் (நவ.11)ம் தேதியுடன் விஸ்தாரா விமான சேவை முடிவுக்கு வருவதையடுத்து இன்று இரு நிறுவனங்களும் அதிகாரப்பூர்வமாக இணைகின்றன.
