admin

மாஜி அ.தி.மு.க., அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு!

சென்னை: ரூ.28 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில், ஒரத்தநாடு எம்.எல்.ஏ.வும், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கத்திற்கு சொந்தமான தஞ்சாவூர், ஒரத்தநாடு அருகே உறந்தைராயன்குடிகாடு பகுதியில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Read More

முக்கிய விளையாட்டுகள் காமன்வெல்த் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது .

33-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி 2026-ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 2ம் தேதி வரை ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற உள்ளது . இந்நிலையில்செலவினத்தை குறைப்பதற்காக, 10 விளையாட்டுகள் தவிர முக்கிய விளையாட்டுகள் காமன்வெல்த் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது .அதன்படி, ஆக்கி , மல்யுத்தம், துப்பாக்கிச்சுடுதல், கிரிக்கெட், டேபிள் டேன்னிஸ், ஸ்குவாஷ், பேட்மிண்டன் உள்ளிட்ட முக்கிய விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளது.

Read More

மகாராஷ்டிரா: 288 சட்டசபை தொகுதிகளில் இன்று முதல் வேட்பு மனுத் தாக்கல்- அக்.29 கடைசி நாள்!

மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் 288 தொகுதிகளிலும் இன்று வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது. மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நவம்பர் 20-ந் தேதி நடைபெறும் நிலையில் இன்று முதல் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்படுகிறது. மகாராஷ்டிராவில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய அக்டோபர் 29-ந் தேதி கடைசி நாளாகும். மகாராஷ்டிராவில் நவம்பர் 20-ந் தேதி பதிவாகும் வாக்குகள் நவம்பர் 23-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

Read More

இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு சந்திரயான் 3 திட்ட பணிகளுக்காக உலக விண்வெளி விருது:

 இந்த ஆண்டுக்கான சர்வதேச விண்வெளி கூட்டமைப்பின் சார்பில் வழங்கப்படும் ஐஏஎப் உலக விண்வெளி விருது, இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. விண்வெளி துறையில் மிகவும் மதிக்கப்படும், இந்த விருதை பெற்றுள்ள அவருக்கு பாராட்டுகள் குவிந்துள்ளன.

Read More

 புயல், மழை பாதிப்புகளை துல்லியமாக கணிக்க, ஏற்காடு மற்றும் ராமநாதபுரத்தில், நவீன ரேடார்கள் அமைக்கும் பணியை, தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் துவக்கியுள்ளது.

தமிழகத்தில் சென்னை, காரைக்கால் என, இரு இடங்களில் மட்டுமே, இந்திய வானிலை துறையின் ரேடார்கள் உள்ளன. இவற்றின் வழியே புயல், காற்றின் வேகம், மழை குறித்த துல்லிய தகவல்கள் பெறப்படுகின்றன. இருப்பினும், தமிழக தென்மாவட்டங்கள், உள்மாவட்டங்களில் பருவ மழை காலத்தில், மேக வெடிப்பு போன்ற காரணங்களால், குறைந்த நேரத்தில் அதிக மழை கொட்ட வாய்ப்புள்ள விபரங்களை அறிய முடியவில்லை. இந்திய வானிலை துறையின், சென்னை மண்டல அலுவலக அதிகாரிகளுடன் ஆலோசித்து, இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த…

Read More

போன், இ-மெயில் என்றிருந்த நிலையில் தற்போது சமூக ஊடகம் மூலம் 6 நாளில் 70 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கடும் நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசு முடிவு

வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபர்கள் முன்பெல்லாம் கட்டுப்பாட்டு அறை, இ-மெயிலில் மிரட்டல்களை விடுத்து வந்தனர். தற்போது அவர்கள் சில சமூக ஊடக கணக்குகளை பயன்படுத்தி மிரட்டல் விடுக்கின்றனர். வெடிகுண்டு மிரட்டலால் டிக்கெட் வாங்கி விமானத்தில் பயணம் செய்பவர்கள் அனுபவிக்கும் மன உளைச்சல் விவரிக்க முடியாதது. பெரும்பாலும், புறப்பட்ட பிறகு ெவடிகுண்டு மிரட்டல் செய்தி வருவதால், மீண்டும் விமான நிலையம் திரும்புவதா? அல்லது வேறு விமான நிலையத்திற்கு திருப்பி விடுவதா? என்ற குழப்பங்களும் நடக்கிறது. அதனால் பாதுகாப்பு ஏஜென்சிகள்…

Read More

போக்குவரத்து விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்: கட்சியினருக்கு தவெக தலைவர் விஜய் அதிரடி கட்டுப்பாடு

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் இன்று வெளியிட்ட அறிக்கை: கழகத் தோழர்கள் எல்லோரையும் போலவே கர்ப்பிணிப் பெண்கள், பள்ளிச் சிறுவர் சிறுமியர், நீண்ட காலமாக உடல்நலமின்றி இருப்பவர்கள், முதியவர்கள் பலரும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து நம் மாநாட்டுக்கு வரத் திட்டமிட்டு இருப்பர். உங்கள் எல்லோருடனும் அவர்களையும் மாநாட்டில் காண வேண்டும் என்ற ஆவல்தான் எனக்கும் இருக்கிறது. ஆனால். எல்லாவற்றையும்விட அவர்களின் நலனே எனக்கு மிக மிக முக்கியம். மாநாட்டிற்காக அவர்கள் மேற்கொள்ளும் நீண்ட…

Read More

ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றம்?

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்என் ரவி விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், புதிய ஆளுநராக தமிழகத்துக்கு நன்கு பரீட்சயமான முன்னாள் மத்திய அமைச்சரான விகே சிங் நியமிக்கப்படலாம் என்று பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

Read More

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் என்னென்ன?

அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு முந்தைய நாள் இரவில் இருந்தே மக்கள் பட்டாசு வெடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். கடந்த சில ஆண்டுகளாக பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

Read More

வயநாடு தேர்தல்: பிரியங்காவை எதிர்த்து நவ்யா ஹரிதாஸ்போட்டி: பா.ஜ., அறிவிப்பு

ராகுல் ராஜினாமா செய்ததால் காலியான வயநாடு தொகுதியில் நவம்பர் 13ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது, காங்கிரஸ் சார்பில் பிரியங்கா போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பா.ஜ., சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்து உள்ளது.

Read More