admin

உலக செஸ் சாம்பியன் குகேஷ்

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற வீரர் குகேஷ்க்கு 5 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும்’ என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், சர்வதேச போட்டிகளில் விளையாடி, உலக சாம்பியன் என்ற பட்டத்தை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக, உலக சாம்பியன் பட்டம் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை குகேஷ் தற்போது பெற்றுள்ளார்.சரித்திரம் படைத்துள்ள செஸ் வீரருக்கு, நாடு முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. 

Read More

விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா 6 மாதம் சஸ்பெண்ட்: திருமாவளவன் நடவடிக்கை

கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்களையும் மீறி, தொடர்ச்சியாக அவர் எதிர்மறையாக செயல்பட்டு வருவதும்; அத்தகைய செயல்பாடுகள், மேலோட்டமாக நோக்கினால் கட்சியின் நலன் மற்றும் அதிகார வலிமைக்கானதாகத் தோன்றினாலும்; அவை கட்சி மற்றும் தலைமையின் மீதான நன்மதிப்பையும் நம்பகத் தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில், பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது. இத்தகைய போக்குகள், கட்சிப் பொறுப்பாளர்களிடையே நிலவும் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கும் வகையில், கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கட்சியினருக்கு இது ஒரு “தவறான முன்மாதிரியாக” அமைந்து விடும் என்கிற…

Read More

“டங்ஸ்டன் சுரங்கம் வந்தால் முதல்வர் பொறுப்பில் இருக்கமாட்டேன்” – சட்டப்பேரவையில் ஸ்டாலின் பேச்சு

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் நாயக்கர்பட்டி கிராமத்தில் இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்திடவும், மாநில அரசின் அனுமதியின்றி எந்த சுரங்க உரிமத்தையும் வழங்கக்கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் அரசின் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.  “எக்காரணம் கொண்டும், தமிழகத்துக்குள் டங்ஸ்டன் சுரங்க திட்டம் வரக்கூடிய வாய்ப்பே இல்லை. அதை தடுத்து நிறுத்துவோம். ஒருவேளை டங்ஸ்டன் சுரங்கம் வந்தால், இந்த முதல்வர் பொறுப்பில் நான் இருக்கமாட்டேன்.” என்று தமிழக…

Read More

இழுபறி முடிவுக்கு வந்தது மகாராஷ்டிரா முதல்வர் பட்நவிஸ்: மும்பையில் இன்று பதவியேற்பு விழா

மகாராஷ்டிரா முதல்வர் யார் என்ற கேள்விக்கு தேர்தல் முடிவு வெளியான 12 நாளுக்கு பிறகு விடை கிடைத்துள்ளது. பாஜவை சேர்ந்த தேவேந்திர பட்நவிஸ் நேற்று தேர்வு செய்யப்பட்டார். மும்பை ஆசாத் மைதானத்தில் இன்று பதவியேற்பு விழா நடக்கிறது. இதில், பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள், மத தலைவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். 

Read More

 பெஞ்சல் புயல் பாதிப்பு

கனமழையால் திருவண்ணாமலை கலெக்டர் வீட்டு மதில் சுவர் இடிந்து விழுந்தது. பெஞ்சல் புயல் காரணமாக கொட்டித் தீர்த்த கனமழை புதுச்சேரியில் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் புயல் பாதிப்பு சென்னையில் இருந்து விரைந்த ராணுவ வீரர்கள் 40 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போளூர் செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலம் மூழ்கியதால் முன்னேயும் செல்ல முடியாமல், ஜவ்வாது மலைத்தொடரில் ஏற்பட்ட வெள்ளம் பின்னேயும் ஓடுவதால் பஸ்சானது ஒரே இடத்தில் தத்தளித்த படியே நின்ற பஸ். விழுப்புரம்…

Read More

திருவண்ணாமலையில் மண்ணில் புதைந்த வீடு; மீட்பு பணியில் தேசிய மீட்புக்குழு!

திருவண்ணாமலையில் பாறைகள் சரிந்து மண்ணுக்குள் புதைந்த வீட்டில், சிக்கிய 7 பேரை மீட்கும் பணியில் 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.பெஞ்சல் புயல் தாக்கம் காரணமாக, இரண்டு நாட்களாக பெய்த பலத்த மழையால், அண்ணாமலையார் மலையின் கிழக்கு பக்கத்தில், வ.உ.சி., நகர், 11வது தெருவின் அருகே திடீரென நேற்று மாலை, 5:00 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இரவு, 7:00 மணிக்கு மழை சற்று குறைந்ததால், அப்பகுதியில் வசிப்பவர்கள் பார்த்தபோது, குடிசை வீடு ஒன்றின்…

Read More

புயல் தாமதம்; நவ.,30ல் கரையை கடக்கிறது பெங்கல் புயல்!

‘வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் உள்ளது. ‘பெங்கல்’ புயல் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே நவ.,30ம் தேதி காலை கரையை கடக்கும்’ என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read More

உலக செஸ் சாம்பியன்ஷிப் இன்று தொடக்கம்

சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி சுற்றுப் போட்டி இன்று முதல் (நவம்பர் 25) டிசம்பர் 13-ம் தேதி வரை சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது. இதில் இந்தியாவைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டரான டி. குகேஷ், நடப்பு உலக சாம்பியனும், சீன வீரருமான டிங் லிரெனை எதிர்கொண்டு விளையாடவுள்ளார். இந்தப் போட்டியில் உலக சாம்பியன் லிரெனுடன் மோதும், 18 வயதான தமிழக வீரரான டி. குகேஷ் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதில் குகேஷ் வெற்றி பெற்றால், மிக இளம் வயதில்…

Read More

2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்காக நடைபெற்ற ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (சிஎஸ்கே)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (சிஎஸ்கே) நிர்வாகம், ரவிச்சந்திரன் அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. மேலும், டேவன் கான்வேயை (நியூஸிலாந்து) ரூ.6.25 கோடிக்கும், கலீல் அகமதுவை ரூ.4.8 கோடிக்கும், ரச்சின் ரவீந்திராவை (நியூஸிலாந்து) ரூ.4 கோடிக்கும், ராகுல் திரிபாதியை ரூ.3.40 கோடிக்கும் ஏலத்தில் எடுத்துள்ளது. நூர் அகமதுவை (ஆப்கானிஸ்தான்) ரூ.10 கோடிக்கும், விஜய் சங்கரை ரூ.1.20 கோடிக்கும் வாங்கியது.ஜெட்டா நகரில் ஐபிஎல் வீரர்களுக்கான திங்கள்கிழமையும் ஏலம் தொடர்ந்து நடைபெறவுள்ளது.

Read More

உ.பி. கலவரத்தில் 3 பேர் உயிரிழப்பு; வாகனங்களுக்கு தீவைப்பு

உத்தர பிரதேச மாநிலம் சம்பல் நகரில் உள்ள முகலாயர் காலத்​தில் கட்டப்​பட்ட ஜமா மசூதியை ஆய்வு செய்ய சென்றபோது அதிகாரி​களுக்​கும், உள்ளூர் மக்களுக்​கும் இடையே மோதல் ஏற்பட்​டது. இது கலவரமாக மாறியதில் 3 பேர் உயிரிழந்​தனர். 30 போலீ​ஸார் காயமடைந்​தனர்.

Read More