எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., இடங்களை வீணாக்கிய 20 மாணவர்கள்; மருத்துவப்படிப்பில் சேர தடை!

அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ்.,பி.டி.எஸ்., படிப்புகளுக்கான இடங்களை தேர்வு செய்து கல்லூரியில் சேராவிட்டால் நீட் தேர்வை ஓராண்டு எழுத தடை விதித்தும், மருத்துவப்படிப்பில் சேர ஓராண்டு தடை விதித்தும் தேசிய மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு அறிவித்தது.

Read More

மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கும் பிரதமரின் வித்யாலஷ்மி திட்டம்.

திறமைவாய்ந்த மாணவர்கள் தரமான உயர்கல்வி நிறுவனங்களில் பயிலுவதற்காக நிதியுதவியை வழங்கும். இந்த திட்டத்தின் மூலமாக கல்வி கட்டணம் மற்றும் கல்வி தொடர்பான பிற செலவுகளின் முழு தொகையையும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் இருந்து பிணையில்லாமல் கல்வி கடனாக பெற முடியும். தேசிய நிறுவன கட்டமைப்பு தரவரிசையில் முதல் 100 இடங்களில் இருக்கும் அரசு மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் 860 தகுதிவாய்ந்த உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலுவதற்கு இந்த திட்டம் பொருந்தும். இதன் மூலமாக…

Read More

ஜி.எஸ்.டி.,யின் கீழ் பதிவு செய்யப்பட்ட போலி நிறுவனங்கள் 

நாடு முழுதும் போலி ஜி.எஸ்.டி., நிறுவனங்களை அடையாளம் காண்பதற்காக, கடந்தாண்டு மே 16ல் துவங்கி, ஜூலை 15 வரை நடைபெற்ற முதல் சிறப்பு விசாரணையில், ஜி.எஸ்.டி.,யின் கீழ் பதிவு செய்யப்பட்டு இருந்த 21,791 நிறுவனங்கள் வாயிலாக 24,010 கோடி ரூபாய் அளவிற்கு ஜி.எஸ்.டி., ஏய்ப்பு நடைபெற்றுள்ளதை கண்டறிந்தனர்.அதன் தொடர்ச்சியாக, 2024 ஆக., 16ம் தேதி முதல் அக்., 30 வரை, இரண்டாவது சிறப்பு விசாரணையில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.இரண்டா வது சிறப்பு விசாரணையில், ஜி.எஸ்.டி.,யின் கீழ் பதிவு செய்யப்பட்ட…

Read More

ரந்தம்பூர் தேசிய பூங்காவில் 25 புலிகள் காணவில்லை

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது ரந்தம்பூர் தேசிய பூங்கா. இங்குள்ள புலிகள் காப்பகத்தில் ஓராண்டில் கிட்டத்தட்ட 25 புலிகள் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விவரத்தை தலைமை வனவிலங்கு காப்பாளர் பவன்குமார் கூறி உள்ளார்.இந்த புலிகள் காப்பகத்தில் மட்டும் 75 புலிகள் உள்ளன. இதில் மூன்றில் ஒரு பங்கு புலிகள் மாயமாகி இருப்பது ராஜஸ்தான் மாநில மக்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைடுத்து, மாநில அரசு விசாரணை குழு ஒன்றை அமைத்து இருக்கிறது.

Read More

சூப்பர் ஆப்’ என்ற புதிய செயலியை  100 கோடி ரூபாய் செலவில் ரயில்வே நிர்வாகம் உருவாக்கி வருகிறது.

ரயில்வே துறை மூத்த அதிகாரிகள் கூறியதாவது:ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு, ஐ.ஆர்.சி.டி.சி., செயலி தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும். தற்போது உருவாக்கப்படும் சூப்பர் செயலி, ஐ.ஆர்.சி.டி.சி., செயலியுடன் ஒருங்கிணைக்கப்படும். மேலும், ரயில்வே சேவைகளை வழங்கி வரும் பிற செயலிகளையும் இந்த சூப்பர் செயலியுடன் ஒருங்கிணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.பயணியர் இன்னும் எளிதாக பயன்படுத்தக்கூடிய வகையில் செயலி வடிவமைக்கப்பட உள்ளது.ரயில்வேக்கு கூடுதல் வருவாய் ஈட்டித்தரும் ஒரு தொழில்நுட்ப வசதியாகத் தான் இந்த சூப்பர் செயலியை நாங்கள் கருதுகிறோம். இது, அடுத்த மாதம் இறுதியில்…

Read More

ஆன்லைன் விற்பனை ரூ.1 லட்சம் கோடி

கடந்த வாரம் முடிவடைந்த ஒரு மாத கால பண்டிகை சீசனில், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் ரூ.1 லட்சம் கோடிக்கு பொருட்களை விற்பனை செய்துள்ளனர். இது கடந்தாண்டு விற்பனையை காட்டிலும் 23 சதவீதம் அதிகம்.ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் ரூ.1 லட்சம் கோடிக்கு பொருட்களை விற்பனை செய்திருந்தன.இது முந்தைய ஆண்டின் தீபாவளி பண்டிகை கால விற்பனையை காட்டிலும் 23 சதவீதம் அதிகம்.

Read More

தங்கம் வாங்குவதில் சீனாவை விஞ்சியது இந்தியா

தங்கம் வாங்குவதில் இந்திய நுகர்வோர் சீனர்களை மிஞ்சி விட்டனர் என உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உலக தங்க கவுன்சில் வெளியிட்ட உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தங்க நாணயங்கள் மற்றும் தங்க கட்டிகள் அதிக கொள்முதல் செய்ததன் மூலம், ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில், சீனாவுடன் ஒப்பிடும்போது இந்திய நுகர்வோர் 51% அதிகமாக தங்கத்தை வாங்கியுள்ளனர்.இதற்கு, தங்கம் மீதான இறக்குமதி வரி 15% லிருந்து 6% ஆக, குறைத்து ஜூலை 23ம்…

Read More

வணிக சிலிண்டர் விலை உயர்வு

தமிழகத்தில், இம்மாதம்(நவம்பர்) வணிக சிலிண்டர் விலை, 61 ரூபாய் 50 பைசா உயர்ந்து 1964.50 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில், வீட்டு சிலிண்டர் கடந்த மாதம், 818.50 ரூபாய் அதன் விலை மாற்றம் செய்யப்படாமல், அதே விலையே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. கடந்த மாதம் 1,903 ரூபாய்க்கு விற்கப்பட்ட வணிக காஸ் சிலிண்டர் விலை, இம்மாதம், ரூ.61.50 உயர்ந்து, 1964.50 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து 4 மாதங்களாக, வணிக சிலிண்டர் விலை உயர்ந்து வருவது…

Read More

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.

விமான நிலையங்கள் மற்றும் மிகப்பெரிய தங்கும் விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக, மகாராஷ்டிர மாநிலம் கோண்டியா பகுதியைச் சேர்ந்த 35 வயது நபரை நாக்பூர் காவலதுறையினர் கைது செய்திருக்கிறார்கள். ஜக்தீஷ் உக்கி என்பவரை நாக்பூர் காவல்துறையின் சிறப்புப் பிரிவினர் கைது செய்திருக்கிறார்கள்.. பயங்கரவாதம் குறித்த புத்தகத்தை எழுதியவரும், ஏற்கனவே இவர் 2021ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டவர் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது

Read More

உள்நாட்டில் சி – 295 ராணுவ விமான தயாரிப்பு: 

ராணுவ வீரர்கள் மற்றும் தளவாடங்களைக் கொண்டு செல்ல, மருத்துவ மீட்புப் பணிகளில் ஈடுபட என பல்வேறு பயன்பாடுகளை கொண்ட சி-295 விமானங்கள் முழுவதும் உள்நாட்டில் தயாரிப்பதற்கான முதல் தொழிற்சாலை நிறுவனமான டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட்டை( டிஏஎஸ்எல்) குஜராத்தின் வதோதரா நகரில் பிரதமர் மோடியும், ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்ஜெஷ் இணைந்து, திறந்து வைத்தனர். குஜராத் டாடா ஆலையில் சி-295 போர் விமானங்கள் தயாரிப்பதன் மூலம் உள்நாட்டில் வேலைவாய்ப்பு பெருகுவதுடன், மேக் இன் இந்தியா திட்டத்திற்கு பலம்…

Read More