நாளை 4 மாவட்டங்களிலும் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் விடுமுறை 

கனமழை காரணமாக 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் இந்த நான்கு மாவட்டங்களிலும் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதேசமயத்தில், காவல்துறை,தீயணைப்புத் துறை, மருத்துவம், குடிநீர், மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட முக்கிய துறைகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை– தமிழக அரசுக்கு, ஆளுநர் பாராட்டு

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மழை பாதிப்புகளை சரிசெய்ய தமிழக அரசு அனைத்து சாத்தியமான வழிகளிலும் முயற்சித்து வருகிறது. வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்ததை விட அதிகமாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கேற்ற வகையில் தமிழக அரசு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது. மழை பாதிப்புகளை அரசு உரிய முறையில் கையாளும் என நம்புகிறேன் என்று கூறினார்.

Read More

சென்னை மக்களுக்கு சுடச்சுட சாப்பாடு விநியோகிக்கும் மாநகராட்சி.. 86 உணவுக் கூடங்கள்

சென்னை மாநகராட்சி முழுவதும், அனைத்து வார்டுகளிலும், உணவு சமைக்கப்பட்டு, மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் மேற்பார்வையில் பொதுமக்களுக்கு உணவு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் மண்டலம் வாரியாக அமைக்கப்பட்டுள்ள உணவு கூடங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உணவு தேவைப்படுபவர்கள் இங்கு தொடர்பு கொண்டால் உணவு வழங்கப்படும். 3 வேளையும் உணவு வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Read More

சாம்சங் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டதில் மகிழ்ச்சி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஒரு மாதத்திற்கும் மேலாக நீடிக்கும் தொடர் வேலை நிறுத்தம், தொழிலாளர்கள் மீதான கைது நடவடிக்கைகள், முதலமைச்சரின் தலையீடு, அமைச்சர்கள் பேச்சுவார்த்தை என்று கடந்த 32 நாட்களாக சாம்சங் இந்தியா நிறுவனத்தில் நடக்கும் போராட்டம் தொடர்பான செய்திகள், ஊடகங்களில் பிரதான இடம் பிடித்துள்ளன. தமிழக அரசின் நிலையை குறை கூறி, எதிர்க்கட்சிகளும் குரல் கொடுக்க ஆரம்பித்தன. அதன் பிறகு விவகாரத்தை தமிழக அரசு தீவிரமாக கையில் எடுத்தது. இதையடுத்துஅரசு, சாம்சங் நிர்வாகம் மற்றும் தொழிலாளர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் இன்று…

Read More

அவசர கால உதவி எண்களை அறிவித்துள்ளது அரசு. மழை குறித்து வதந்திகளை பரப்பக்கூடாது: அரசு அறிவுரை

அரசு நிர்வாகத்தை பொறுத்தவரை மழையை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் உள்ளோம்; அனைத்து துறைகளும் தயாராக உள்ளன. வசிப்பது தாழ்வான பகுதி எனில், அரசு முகாம் உட்பட பாதுகாப்பான இடத்துக்கு செல்லவும்அரசு வெளியிடும் முன்னெச்சரிக்கை, அறிவுரையை பின்பற்ற வேண்டும் கனமழை அடுத்த 3 நாட்களுக்கு தொடரும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பை அடுத்து சென்னை மாநகராட்சி அவசர கால உதவி எண்களை அறிவித்துள்ளது.1913,044-2561 9207,044-2561 9204,044-2561 9206,89911 24176,89911 24175, தாம்பரம் மாநகராட்சி உதவி எண்கள் 18004254355,18004251600,வாட்ஸ்…

Read More

பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு

* 12 ம் வகுப்புக்கு 03.03.2025 தேர்வு துவங்கி, 25.03.2025 தேதி முடிகிறது. ரிசல்ட்12ம் வகுப்பு- மே 9 ம் தேதி 2025* 11ம் வகுப்புக்கு 05.03.2025 தேர்வு துவங்கி 27.03.2025 தேதி வரை நடக்கிறது.  ரிசல்ட்11ம் வகுப்பு- மே 19ம் தேதி, 2025* 10ம் வகுப்புக்கு 28.03.2025 தேர்வு துவங்கி, 15.04.2025 தேதி முடிகிறது.  ரிசல்ட்10ம் வகுப்பு- மே 19ம் தேதி,2025 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை * தமிழ்- 28.03.2025 * ஆங்கிலம்- 02.04.2025*…

Read More

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு வார்னிங்

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 16ம் தேதி அதி கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. நீர்நிலைகள் வேகமாக நிரம்பினாலும், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.தமிழக உள் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக, வரும் 14ம்…

Read More

அண்ணாமலை நவ., 23ல் சென்னை திரும்புகிறார்.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ஆக்ஸ்போர்டு பல்கலையில் மூன்று மாத அரசியல் புத்தாய்வு படிப்பில் சேர்ந்து படிக்க, கட்சித் தலைமை அனுமதியுடன் ஆக., 27ல் லண்டன் சென்றார். நவ., 23ல் சென்னை திரும்புகிறார்.அடுத்த ஆண்டு பிப்ரவரியில், மீண்டும் அரசியல் புத்தாய்வு படிப்புக்கான சான்றிதழ் பெறச் செல்வார்.இதனிடையே, தமிழக பா.ஜ.,வில் பல மாவட்ட நிர்வாகிகளை அண்ணாமலை மாற்றியமைக்க உள்ளார்.

Read More

விஜயதசமி | தமிழகம் முழுவதும் நாளை அரசுப்பள்ளிகள் செயல்படும்!

விஜயதசமியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நாளை அரசுப்பள்ளிகள் செயல்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. நவராத்திரியின் நிறைவாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் கல்வியை தொடங்கும் வகையில், குழந்தைகளை முதல் முறையாக பள்ளியில் சேர்ப்பார்கள்.ஆகவே நாளைய தினம் அரசுப் பள்ளிகள் செயல்பட பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. மாணவர் சேர்க்கைக்காக அரசுப் பள்ளிகள் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More