காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்த தடை

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, நாளை (செப்., 28) முதல் அக்., 6ம் தேதி வரை காலாண்டு விடுமுறை. ‘இந்த நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது; பள்ளி திறக்கும் நாளன்றே மாணவர்களுக்கு விடைத்தாள்களை வழங்க வேண்டும்’ என, கடலுார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

Read More

செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.

அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்துக்கும் மேலாக சிறையிலிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம். அவருக்கு பல்வேறு நிபந்தனைகளை நீதிமன்றம் விதித்துள்ள நிலையில் வாரந்தோறும் திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு சென்று கையெழுத்திட வேண்டும் என்பது அதில் முக்கியமானதாகும்.

Read More

தமிழகத்திற்கு 3 நாட்களுக்கு கனமழை.

தமிழகத்தில் 3 நாட்களுக்கு களமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம். திருவண்ணாமலை. கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று கணித்துள்ளது. 28ம் தேதி கோவை, வேலூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களிலும், 29ம் தேதி 10 மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Read More

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம் – நாளை பிரதமரை சந்திக்கிறார்

பள்ளிக்கல்வித்துறை, மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு நிதி கேட்டு பிரதமரை சந்திக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார்.

Read More

தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாள்

தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17ம் தேதி சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்படும் என கடந்த 2021ம் ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அன்று முதல் ஆண்டுதோறும் செப்டம்பர் 17ம் தேதி சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜார்ஜ் கோட்டையில், அலங்கரிக்கப்பட்டிருந்த பெரியார் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து முதல்வர் தலைமையில் உறுதிமொழி நிகழ்ச்சியும் நடந்தது.

Read More

பெரியார் வழியில் பயணிப்போம் – தவெக தலைவர் விஜய்

பெரியார் நினைவிடத்தில் த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாளான இன்று தவெக தலைவர் விஜய் தனது X தளத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதில் சாதி, மத ஆதிக்கம் மற்றும் மூடப்பழக்க வழக்கங்களால் விலங்கிடப்பட்டுக் கிடந்த தமிழக மக்களிடையே விழிப்புணர்வை விதைத்தவர். மக்களை பகுத்தறிவு மனப்பான்மையுடன் போராடத் தூண்டியவர். பகுத்தறிவு பகலவன், பெரியார் அவர்களின் பிறந்தநாளில் அவர் வலியுறுத்திய சமத்துவம், சமூக நீதி, சம உரிமை பாதையில் பயணிக்க உறுதி ஏற்போம்” என பதிவிட்டுள்ளார்.

Read More

 முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு:

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு , திமுக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை என பேட்டி

Read More

விஜயின் தவெக மாநாட்டுக்கு அனுமதி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நடத்த நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி அளித்துள்ளது. விஜய் கட்சியின் மாநாட்டுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளதாக விழுப்புரம் டிஎஸ்பி தகவல் தெரிவித்துள்ளார். மாநாடு நடக்கும் இடம் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே உள்ளதால் போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாமல் நடத்த வேண்டும். குழந்தைகள், பெரியவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என காவல்துறை த.வெ.க மாநாட்டுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

Read More