பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உலக புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் இன்று(செப்.7) விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு தங்க மூஷிக வாகனத்தில் உற்சவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தீர்த்தவாரி வெகு விமரிசையாக நடந்தது.அதிகாலை முதல் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தமிழக அரசுக்கு கண்டனம்

விநாயகர் சிலை கரைப்புக்கு கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை தமிழக அரசு ஏற்க மறுத்துள்ள நிலையில், அதற்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Read More

விநாயகர் சிலைகள்,ஊர்வலம்-கட்டுப்பாடு

சென்னையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 16,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், சிலைகள் வைப்பதற்கான இடங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக போலீசார் இந்து அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி விழா வரும் 7ம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, அமைதியான முறையில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி போலீசார் பல்ேவறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அதன்படி போலீசார் சென்னை உயர்…

Read More

ஆசிரியர் தின வாழ்த்து

சென்னை: ஆசிரியர் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘நல்ல ஆசிரியர்கள் வாய்க்கப்பெற்ற மாணவர்கள், நல்லதொரு நாளையை உருவாக்கும் திறம்பெற்றவர்கள். அறிவும் பண்பும் ஊட்டி, மாணவர்களுக்குத் திசைகாட்டியாக விளங்கும் நல்லாசிரியர்களுக்கு வாழ்த்துகள்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார் .

Read More

சென்னை – நாகர்கோவில், மதுரை – பெங்களூரு வந்தே பாரத் 

பிரதமர் நரேந்திர மோதி நேற்று (ஆக. 31) மூன்று அதிவிரைவு வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கிவைத்தார். மீரட் – லக்னோ, சென்னை எழும்பூர் – நாகர்கோவில் மற்றும் மதுரை – பெங்களூரு கண்டோன்மென்ட் இடையேயான மூன்று வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோதி காணொளி மூலம் டெல்லியிலிருந்து தொடங்கிவைத்தார்.தமிழகத்தில் ஓடும் வந்தே பாரத் பட்டியல் 1,சென்னை செண்ட்ரல்-மைசூரு 20607. 2,சென்னை செண்ட்ரல்-கோவை 20643. 3,சென்னை எழும்பூர்-திருனெல்வேலி 20665. 4,சென்னை செண்ட்ரல்-விஜயவாடா 20677. 5,கோவை-பெங்களூரு 20641. 6,சென்னை…

Read More

இன்று முதல் தமிழகத்தில் 25 டோல்கேட்டுகளில் கட்டண உயர்வு!

தமிழகத்தில் மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்கள் என 2 முறை கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டது தேர்தல் காரணமாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதற்கு மாறாக ஜூன் மாதம், 36 சுங்கச்சாவடிகளில் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது. செப்டம்பர் 1 ஆம்தேதி முதல், ஏனைய 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று முதல் சுங்க கட்டணம் உயர்வு அமலுக்கு வரவுள்ளது.

Read More

ஹெச்.ராஜா தலைமையிலான ஒருங்கிணைப்புக் குழு

அரசியல் குறித்து படிக்க 3 மாதங்களுக்கு லண்டன் சென்றுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இந்த இடைப்பட்ட காலத்துக்கான பாஜக பொறுப்புத் தலைவராக இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை.  இந்தநிலையில், கட்சி சார்ந்த பணிகளில் முடிவெடுக்க ஹெச்.ராஜா தலைமையிலான ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது என பாஜக தற்போது அறிவிப்பினை வெளியாகியிட்டுள்ளது.குழுவில், எச்.ராஜா ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அந்த குழுவில் தமிழக பாஜக துணை தலைவர் சக்கரவர்த்தி, கனகசபாபதி, மாநில பொதுச்செயலாளர்கள் முருகானந்தம், பேராசிரியர் ராம சீனிவாசன், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்…

Read More

அரசுப் பள்ளி மாணவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் 7.5

 மருத்துவ படிப்பு 2020-21-ம் ஆண்டில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின்கீழ் 435 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்தனர். 2021-22-ல் 555 பேரும் 2022-23-ல் 584 பேரும் மருத்துவ படிப்பில் சேர்ந்தனர். நடப்பு 2023-24-ம் ஆண்டில் 622 பேரும் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளார்கள். 496 எம்பிபிஎஸ் படிப்பிலும் 126 பிடிஎஸ் படிப்பிலும் அரசு பள்ளி மாணவர்கள் சேர்ந்துள்ளனர். எம்பிபிஎஸ் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு காரணமாக கூலித்தொழிலாளி, வீட்டு வேலை செய்பவர், ஏழை விவசாயி…

Read More

ரஜினி பேச்சு-அடங்காத சலசலப்பு..

தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ என்ற நூலின் வெளியீட்டு விழா சென்னையில் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், “புதிய மாணவர்களை எளிதாக சமாளித்து விடலாம். இங்க ஏகப்பட்ட பழைய மாணவர்கள் உள்ளனர். அதுவும் சாதாரணமான பழைய மாணவர்கள் அல்ல. அசாத்தியமானவர்கள். யாரும் ஃபெயில் ஆனவர்கள் இல்ல. எல்லாரும் ரேங்க் வாங்கிட்டு கிளாஸ் விட்டு போக மாட்டேனு இங்கேயே இருப்பவர்கள் ” என்று பேசினார்…

Read More