ஸ்மார்ட் மீட்டர் பொருத்தியதும் மாதாந்திர மின் கணக்கெடுப்பு:

சென்னை: ”மாதந்தோறும் மின் நுகர்வு கணக்கிடும் திட்டத்தை விரைவாக செயல்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். விரைவில், அது நடைமுறைக்கு வரும்,” என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

Read More

காரைக்குடியில் முதல்வர்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ரூபாய் 12 கோடி மதிப்பீட்டில் ப.சிதம்பரம் குடும்பத்தாரால் கட்டப்பட்டுள்ள லட்சுமி வளர் தமிழ் நூலகத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். மற்றும் அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் மாணவர்களின் நிதி பங்களிப்பில் 5 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார்.பின்னர் பல்கலைக்கழக அரங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றி விட்டு சிறிது ஓய்வுக்கு பின்…

Read More

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 2025

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த போட்டியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த 1200 காளைகளும், 900 மாடுபிடி வீரர்களும் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான டோக்கன்கள் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்பதற்காக வந்த 959 காளைகளில் மருத்துவ பரிசோதனையில் 3 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. மீதமுள்ள 956 காளைகள் கோவில் காளைகள் உட்பட 1000 காளைகள் இன்று களம் கண்டன.மொத்தம் 9 சுற்றுகள் நடத்தப்பட்டது. மொத்தம் 1000 காளைகள்…

Read More

பாலமேடு ஜல்லிக்கட்டு

மதுரை பாலமேட்டில் உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில், ஆயிரம் காளைகள் பங்கேற்றுள்ளன. மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 14 காளைகளை அடக்கி நத்தம் பார்த்திபன் முதலிடம் பிடித்தார். மஞ்சம்பட்டியைச் சேர்ந்த துளசி 12 காளைகளை அடக்கி 2ம் இடத்தை பிடித்தார். பொதும்பு பிரபாகரன் 11 காளைகளை அடக்கி 3வது இடம் பிடித்துள்ளார். சத்திரப்பட்டி விஜய தங்க பாண்டியன் என்பவரின் காளை, சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக முதலமைச்சர் சார்பில் டிராக்டர்…

Read More

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 1 லட்சம் பரிசு வென்ற வீரர்!

சிவகங்கை மாவட்டம், ஆவாரங்காடு முத்துக்காளை, ரவி, மணிமாறன்பிரதர்ஸ் சார்பில் அவிழ்க்கப்பட்ட காளையை அடக்கினால் 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் 2 தங்க காசு அறிவிக்கப்பட்டது. இந்த காளையை அவனியாபுரம் ரஞ்சித் அடக்கினார் அவருக்கு பரிசுகளை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்

Read More

அனல் பறந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

மதுரை: மதுரை அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டி நிறைவடைந்தது. இதில் 19 காளைகளைப் பிடித்த திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த கார்த்தி என்பவருக்கு முதல் பரிசாக காரும், கன்றுடன் கூடிய பசுவும் வழங்கப்பட்டன. இதேபோல், சிறந்த காளைக்கான முதல் பரிசை வி.கே.சசிகலாவின் காளை வென்றது. காளை வளர்ப்பாளர் மலையாண்டி பரிசுகளைப் பெற்றுக் கொண்டார்

Read More

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!

தமிழர் திருநாளாம் அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.அதிகாலையில் எழுந்த மக்கள், நீராடி, புத்தாடை அணிந்து மகிழ்ந்தனர். பின்னர், சூரியனை வணங்கி, கரும்புகள் வைத்து, புதுப்பானையில் பொங்கலிட்டு கொண்டாடினர். வீடுகள் முன்பு, வாசல்களில் பல வண்ண கோலமிட்டு, புத்தம் புது பானைகளில் புத்தரிசி இட்டு பொங்கலிட்டு பெண்கள் மகிழ்ந்தனர்.உற்றார், உறவினர்கள், நண்பர்களுக்கு பொங்கல் வாழ்த்து செய்தியை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர்.

Read More

போகிப் பண்டிகை கொண்டாட்டம் : புகை மூட்டம், பனிமூட்டம் காரணமாக சென்னையில் 30 விமானங்களின் நேரம் மாற்றியமைப்பு!

 போகிப் பண்டிகையால் ஏற்பட்ட புகை மூட்டம் மற்றும் பனிமூட்டம் காரணமாக சென்னையில் 30 விமானங்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னைக்கு வர வேண்டிய, புறப்பட வேண்டிய 30 விமானங்கள் நேரம் மாற்றி அமைக்கப்பட்டன. டெல்லி, பெங்களூருவில் இருந்து சென்னை வர வேண்டிய 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமான நிலையத்தில் ஓடு பாதையே தெரியாத அளவுக்கு புகை மூட்டம் காணப்படுவதால் விமானங்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது

Read More

டயர், டியூப் எரிக்காமல் போகி கொண்டாட வேண்டுகோள்

சென்னை : ‘பொதுமக்கள் டயர், டியூப் போன்றவற்றை எரிக் காமல், போகி பண்டி கையை கொண்டாட வேண் டும்’ என, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. போகி அன்று பொருட்களை எரிக்கும் போது ஏற்படும் புகையால் காற்று மாசு அடைகிறது, மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.விமானங்கள் வருகை, புறப்பாடு தாமதமாகிறது. வாகன விபத்துக்கும் புகை காரணமாகிறது.எனவே, பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக், டயர், டியூப் போன்றவற்றை எரிக்காமல், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில்,…

Read More

‘டங்ஸ்டன்’ திட்டத்தை ரத்து செய்யக்கோரி மேலூர் விவசாயிகள், பொதுமக்கள் பேரணி

டங்ஸ்டன் ’ திட்டத்தை முழுமையாக ரத்து செய்யக் கோரி, அரிட்டாபட்டி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், விவசாயிகள், 15 கி.மீ நடைபயண போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலூர் பகுதி ஒரு போக பாசன விவசாயிகள் மற்றும் மேலூர் தொகுதி மக்கள் ஒன்றிணைந்து மதுரை ,திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள சிக்கம்பட்டி டோல்கேட் பகுதியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் நடை பயணமாக சென்று தல்லாகுளம் மத்திய தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தனர். இதன்படி…

Read More