

மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய குகேஷுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை: மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய குகேஷ்க்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய குகேஷ் வாழ்த்து தெரிவித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு: நார்வே செஸ் 2025 தொடரில் மேக்னஸ் கார்ல்சனை கிளாசிக்கல் பிரிவில் வீழ்த்தியமைக்காக குகேஷ்க்கு பாராட்டுகள். இந்திய செஸ்சுக்கு இது பெருமைமிகு தருணம், குகேஷ் சிறப்புமிகு பயணத்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல், உலக செஸ் அரங்கில் இந்தியாவின் உறுதியான வளர்ச்சியில் இது மற்றுமொரு திடமான படி. இவ்வாறு…

ஐபிஎல் 2025 பைனல்
இந்த முறை, இறுதிப் போட்டியில் களமிறங்கும் அணிகள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) ஆகும். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி குவாலிஃபையர் 1 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி நேரடியாக இறுதிக்கு முன்னேறியது. பஞ்சாப் கிங்ஸ் அணி, குவாலிஃபையர் 2 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி, இறுதிப் போட்டியில் ஆர்சிபி-யை எதிர்கொள்ளத் தயாராக உள்ளது. இந்த முக்கியமான இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறுகிறது….

எலான் மஸ்க் இந்தியாவில் உற்பத்தி தளத்தை அமைக்க வேண்டாம் என முடிவு
உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகன நிறுவனமான டெஸ்லாவின் இந்த முடிவு, இந்திய சந்தையில் எலகட்ரிக் கார் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தாலும், இப்பிரிவை மேம்படுத்துவதற்கு மற்ற நிறுவனங்களுக்கு வாய்ப்பை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது மொத்த கார் விற்பனையில் எலக்ட்ரிக் வாகனங்கள் 3% மட்டுமே என்றாலும், 2030-ஆம் ஆண்டுக்குள் இது 30% ஆக உயர்த்துவதற்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இந்த வளர்ச்சி, உலகளாவிய வாகன உற்பத்தியாளர்களுக்கு இந்தியா ஒரு…

ஆபரேஷன் சிந்தூர்..
ஆபரேஷன் சிந்தூர்: கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதன்காரணமாக, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் வான்வழி தாக்குதலை மேற்கொண்டது இந்திய ராணுவம். பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதுகாப்புத் துறை…

‘ஆபரேஷன் சிந்தூர்’ – இந்தியா குறிவைத்து தாக்கிய 9 இலக்குகள்
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா வான்வழி தாக்குதல் மூலம் குறிவைத்து தகர்த்த 9 பயங்கரவாத முகாம்கள் பற்றிய தகவல்களை அரசு பகிர்ந்துள்ளது. 1.முசாஃபர்பாத்தில் உள்ள சாவய் நாலா முகாம்: இது லஷ்கர் இ தொய்பாவின் பயிற்சி முகாமாக இருந்தது. கடந்த 2024, அக்.20-ல் சோன்மார்க்கில் நடந்த தாக்குதல், 2024, அக்.24 குல்மார்க்கில் நடந்த தாக்குதல், 2025. ஏப்.22 பஹல்காமில் நடந்த தாக்குதல் ஆகியவற்றில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு இங்குதான் பயிற்சி…

எங்களுக்கும் தி.மு.க.,வுக்கும் தான் போட்டி: பொதுக்குழுவில் விஜய் பேச்சு.
இதுவரை தமிழகம் காணாத ஒரு தேர்தலை அடுத்தாண்டில் தமிழகம் காணப் போகிறது. இரண்டே இரண்டு பேருக்கு இடையில் தான் போட்டி. த.வெ.க.,வுக்கும், தி.மு.க.,வுக்கும் தான் தேர்தலில் போட்டி நிலவும்,” என்று கட்சி பொதுக்குழுவில் நடிகர் விஜய் பேசினார். சட்டம் ஒழுங்கு என்று ஒன்னு இருக்கிறதாகவே தெரியவில்லை. அது எல்லாம் இந்த கரப்ஷன், கபடதாரிகள் கவர்மென்ட் தான் காரணம். இந்த நிலைமை மாற வேண்டும்.மன்னராட்சி முதல்வர் அவர்களே, உங்க ஆட்சியை பற்றி கேள்வி கேட்டால் மட்டும் ஏன் சார்…

நிலநடுக்கத்தால் பாங்காங்கில் அவசரநிலை பிறப்பிப்பு
மியான்மரில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் தாய்லாந்தின் பாங்காங்கிலும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுக்குமாடி கட்டடம் தரைமட்டமானதில் 40 பேர் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மியான்மரின் வடகிழக்கு நகரமான சகாய்ங்கில் இருந்து 16 கி.மீ., தொலைவில் 10. கி.மீ., ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவானது. தொடர்ந்து, மற்றொரு நிலநடுக்கமும் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 பதிவாகியது. ஒரே சமயத்தில் அடுத்தடுத்து…

மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 7.2 ஆக பதிவு
மியான்மரில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்திய நேரப்படி காலை 11.50 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகி உள்ளது. இதில் அந்த நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதன் தாக்கம் மியான்மரை ஒட்டியுள்ள தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் உணரப்பட்டது. இதையடுத்து பகல் 12 மணி அளவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் மியான்மரில் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோ மீட்டர்…

2025 இந்தியன் பிரீமியர் லீக்
2025 இந்தியன் பிரீமியர் லீக் என்பது 2007ஆம் ஆண்டு இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தினால் தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் என்ற தொழில்முறை இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரின் பதினெட்டாவது போட்டித்தொடர் ஆகும். இது வரையிலான ஆட்டங்கள் விபரம்.

தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டம்
இந்திய கூட்டாட்சியை காக்கும் வரலாற்றின் மிக முக்கியமான நாள் இது. தொகுதி மறுசீரமைப்பை ஏற்க முடியாது என்பதில் உறுதியாக உள்ளோம். இது எண்ணிக்கை பற்றியதல்ல அதிகாரத்தை பற்றியது என்று தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கை குழுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னையில் நடந்த தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டுக்குழு கூட்டத்தில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது: இந்தியாவின் பலம். மத்திய அரசு மாநிலங்களுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். கூட்டுக்குழு கூட்டத்தில் பஞ்சாப் முதல்வர் பகவந்த்…