அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 2025

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த போட்டியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த 1200 காளைகளும், 900 மாடுபிடி வீரர்களும் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான டோக்கன்கள் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்பதற்காக வந்த 959 காளைகளில் மருத்துவ பரிசோதனையில் 3 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. மீதமுள்ள 956 காளைகள் கோவில் காளைகள் உட்பட 1000 காளைகள் இன்று களம் கண்டன.மொத்தம் 9 சுற்றுகள் நடத்தப்பட்டது. மொத்தம் 1000 காளைகள்…

Read More

கேரளாவுக்கு இன்று பிறவி தினம், கர்நாடகாவில் ராஜ்யோத்சவா.. தமிழ்நாடு நாள் மட்டும் ஜூலை 18 ஏன்?

1956ம் ஆண்டு நவம்பர் மாதம் 1ம் தேதி நாடு முழுவதும் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது கேரளா,கர்னாடகா மாநிலங்கள் தங்கள் மாநில நாளை, ஆண்டுதோறும் நவ.1ம் தேதி கடைபிடித்து வருகின்றன.2019ம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு, இனி நவம்பர் மாதம் 1ம் தேதி மாநில தினமாக கொண்டாடப்படும் என்று அறிவித்திருந்தது. இந்த அறிவிப்புக்கு அப்போதே சில எதிர்ப்புகள் எழுந்தன. நிலத்தை இழந்த நாளை, மாநில நாளாக கொண்டாட முடியாது என தமிழறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். சிலர் இந்த…

Read More

நாளை 4 மாவட்டங்களிலும் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் விடுமுறை 

கனமழை காரணமாக 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் இந்த நான்கு மாவட்டங்களிலும் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதேசமயத்தில், காவல்துறை,தீயணைப்புத் துறை, மருத்துவம், குடிநீர், மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட முக்கிய துறைகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நவ.,5ல் நடக்கிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல், நான்காண்டுக்கு ஒரு முறை நடக்கிறது. இப்போது நடக்கும் தேர்தலில், தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி சார்பிலும், முன்னாள் அதிபர் டிரம்ப் குடியரசு கட்சி சார்பிலும் போட்டியிடுகின்றனர்.அதிபர் தேர்தலில் போட்டியிடுவோர் நேரடியாக மக்களிடம் ஓட்டு கேட்டு பிரசாரம் செய்தாலும், மக்கள் நேரடியாக அதிபரை தேர்வு செய்வதில்லை. ‘எலக்ட்ரோல் காலேஜ்’ முறை பின்பற்றப்படுகிறது. இந்த எலக்ட்ரோல் காலேஜ் மொத்த ஓட்டு எண்ணிக்கை 538 ஆகும். இதில், 270 பிரதிநிதிகளின் ஓட்டுக்களை பெறுபவர்,…

Read More

இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழகத்தை சேர்ந்தவர் நியமனம்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் (இஸ்ரோ) தலைவராக தற்போது சோம்நாத் உள்ளார். இவரது பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இந்த நிலையில், இஸ்ரோவின் புதிய தலைவராக வி. நாராயணனை நியமித்து மத்திய அரசின் நியமனக்குழு நியமனம் செய்துள்ளது.

Read More

சுதந்திர போராட்ட வீரர்கள் வெண்ணி காலாடி, குயிலி, எத்தலப்ப நாயக்கர் சிலைகளை, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தென்காசி மாவட்டத்தில், சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவன் படைத் தளபதி வெண்ணி காலாடிக்கும், சிவகங்கை மாவட்டத்தில் சுதந்திர போராட்ட வீராங்கனை குயிலிக்கும், செய்தி மக்கள் தொடர்பு துறை வாயிலாக, 50 லட்சம் ரூபாய் செலவில் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.திருப்பூர் மாவட்டத்தில் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கருக்கு, 2.60 கோடி ரூபாய் செலவில் சிலை மற்றும் அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றை, தலைமை செயலகத்தில் இருந்தபடி, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Read More

ஆபரேஷன் சிந்தூர்..

ஆபரேஷன் சிந்தூர்: கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதன்காரணமாக, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் வான்வழி தாக்குதலை மேற்கொண்டது இந்திய ராணுவம். பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதுகாப்புத் துறை…

Read More

மஹாராஷ்டிராவில் 65.1 சதவீதம் ஓட்டுப்பதிவு; 30 ஆண்டுகளில் அதிகம்!

மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள, 288 சட்டசபை தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. 1995ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்குப் பிறகு, நேற்று அதிக ஓட்டுகள் பதிவாகியுள்ளன. 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் 65.1 சதவீதம் ஓட்டுப் பதிவு ஆகியுள்ளது.

Read More

 புயல், மழை பாதிப்புகளை துல்லியமாக கணிக்க, ஏற்காடு மற்றும் ராமநாதபுரத்தில், நவீன ரேடார்கள் அமைக்கும் பணியை, தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் துவக்கியுள்ளது.

தமிழகத்தில் சென்னை, காரைக்கால் என, இரு இடங்களில் மட்டுமே, இந்திய வானிலை துறையின் ரேடார்கள் உள்ளன. இவற்றின் வழியே புயல், காற்றின் வேகம், மழை குறித்த துல்லிய தகவல்கள் பெறப்படுகின்றன. இருப்பினும், தமிழக தென்மாவட்டங்கள், உள்மாவட்டங்களில் பருவ மழை காலத்தில், மேக வெடிப்பு போன்ற காரணங்களால், குறைந்த நேரத்தில் அதிக மழை கொட்ட வாய்ப்புள்ள விபரங்களை அறிய முடியவில்லை. இந்திய வானிலை துறையின், சென்னை மண்டல அலுவலக அதிகாரிகளுடன் ஆலோசித்து, இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த…

Read More

சந்திரயான் 5 திட்டத்துக்கு தேசிய விண்வெளி ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.

டெல்லி: நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதற்கான முன்னோடி திட்டமான சந்திரயான் 5 திட்டத்துக்கு தேசிய விண்வெளி ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. இந்தியா-ஜப்பான் இணைந்து திட்டத்தை தயாரிக்க உள்ளனர். சந்திரயான் -5 திட்டத்துக்கு நிலவு துருவ ஆய்வு திட்டம்(லூபெக்ஸ்) என்று பெயரிடப்பட்டு உள்ளது. ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் ரோவரையும், இஸ்ரோ லேண்டரையும் தயாரிக்க உள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திரயான் -5 திட்டத்தில் அதிகசக்தி வாய்ந்த, அதிக எடை கொண்ட லேண்டரை, ரோவரை பயன்படுத்த உள்ளோம். நிலவில்…

Read More