தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு; அடுத்த ஆண்டு தொடங்குகிறது

மக்கள் தொகை கணக்கெடுப்பு அடுத்தாண்டு தொடங்கும் என்றும், புள்ளி விபரங்கள் 2026ம் ஆண்டில் அறிவிக்கப்படும் என மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.நாட்டில் பத்தாண்டுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்.கடைசியாக, 2011ல் முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 2021ல் கணக்கெடுப்பை நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், கொரோனா பரவல் காரணமாக பணிகள் தடைபட்டன. இதனால், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஒத்தி வைக்கப்பட்டது.இந்நிலையில், அடுத்த ஆண்டின் துவக்கத்திலேயே மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் துவக்கப்பட்டு,…

Read More

நிதேஷ் குமார் தங்கப் பதக்கம் வென்றார்.

பாரா ஒலிம்பிக் ஆடவர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் நிதேஷ் குமார் இன்று (02.09.2024) தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இவர் பிரிட்டன் வீரர் டேனியல் பெதெல்லை 21க்கு 14, 18க்கு 21, 23க்கு 21 செட் கணக்கில் வீழ்த்தி அபார சாதனை புரிந்துள்ளார். அதே சமயம் ஆடவர் வட்டு எறிதல் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் யோகேஷ் கதுனியா வெள்ளி வென்றார். இதன் மூலம் பாரிஸ் பாரா ஒலிம்பிக் தொடரில் இந்திய அணி…

Read More

லட்டு விவகாரம்: கடவுளை அரசியலுக்காக பயன்படுத்தக்கூடாது – சந்திரபாபு நாயுடுவுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்

திருப்பதி லட்டு விவகாரத்தில் ஏற்கனவே விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கும்போது, முதல்-மந்திரி என்ற பொறுப்பான பதவியில் இருக்கும் நீங்கள், ஏன் இந்த விவகாரத்தைநேரடியாக ஊடகங்களிடம் ஏன் எடுத்துச் சென்றீர்கள்? எஸ்டிஐ குழுவின் அறிக்கை கிடைப்பதற்கு முன் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க வேண்டிய அவசியம் என்ன? லட்டு பிரசாதம் தொடர்பான ஆய்வு முடிவுகள் ஜூலையில் வந்த நிலையில் செப்டம்பர் மாதம் வெளியிட்டது ஏன்? திருப்பதி லட்டு விவகாரத்தில் கடவுளை அரசியலுக்காக பயன்படுத்தக்கூடாது. மத உணர்வுகளை மதிக்க வேண்டும் என நீதிபதிகள் கூறினார்.

Read More

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

சென்னை: வடகிழக்கு பருவமழையை முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணிக்க 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பணிகளை மண்டல வாரியாக ஒருங்கிணைத்து துரிதப்படுத்த 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம். வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்த நிலையில் உத்தரவு பிறப்பித்துள்ளார்

Read More

பாராசிட்டமால், பான் டி உள்பட 53 மருந்துகள் தரக்கட்டுப்பாட்டுத் தேர்வில் தோல்வி!

2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம் வெளியிட்ட அறிக்கையின்படி, பாராசிடமால், விட்டமின் டி, கால்சியம் சத்து மாத்திரைகள், உயர் ரத்த அழுத்த மாத்திரைகள், நீரிழிவு மாத்திரைகள், நிர்ணயிக்கப்பட்ட தர அளவில் இல்லை. மாநில மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள், ஒவ்வொரு மாதமும் தன்னிச்சையாக மாத்திரைகளின் மாதிரிகளை ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்புவார்கள். அதன்படி, ஆகஸ்ட் மாத ஆய்வு முடிவு இந்த தகவல்களை அளித்திருக்கிறது. விட்டமின் சி, டி3 மாத்திரைகள், ஷெல்கால், விட்டமின் பி காம்ப்ளெக்ஸ், விட்டமின்…

Read More

புரோ கபடியில் தமிழக வீரர்கள்

11வது புரோ கபடி தொடருக்கான ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் எப்போதும் இல்லாத வகையில் தமிழக வீரர்கள் பலர் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக அஜித்தை ரூ.66 இலட்சத்திற்கு புனே அணி ஏலத்தில் எடுத்தது. அவரைத் தொடர்ந்து ஸ்டூவர்ட்டை ரூ.14.2 இலட்சத்திற்கும், தமிழ்நாட்டின் சிறந்த கபடி வீரர் சதீஷ் குமாரை ரூ.13 இலட்சத்திற்கும், தனசேகரனை ரூ.9.4 இலட்சத்திற்கும் மும்பை அணி வாங்கியது. இளம் வீரர் தரணிதரனை ரூ.13 இலட்சத்திற்கு ஜெய்ப்பூர் அணியும், மணிகண்டனை ரூ.9 இலட்சத்திற்கு ஹரியானா…

Read More

ஹெச்.ராஜா தலைமையிலான ஒருங்கிணைப்புக் குழு

அரசியல் குறித்து படிக்க 3 மாதங்களுக்கு லண்டன் சென்றுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இந்த இடைப்பட்ட காலத்துக்கான பாஜக பொறுப்புத் தலைவராக இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை.  இந்தநிலையில், கட்சி சார்ந்த பணிகளில் முடிவெடுக்க ஹெச்.ராஜா தலைமையிலான ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது என பாஜக தற்போது அறிவிப்பினை வெளியாகியிட்டுள்ளது.குழுவில், எச்.ராஜா ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அந்த குழுவில் தமிழக பாஜக துணை தலைவர் சக்கரவர்த்தி, கனகசபாபதி, மாநில பொதுச்செயலாளர்கள் முருகானந்தம், பேராசிரியர் ராம சீனிவாசன், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்…

Read More

 செபி தலைவர் மாதவி புரி புச் பொது கணக்கு குழு முன் இன்று (அக்.24) ஆஜராகிறார்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற நிறுவனம், செபி அமைப்பின் மாதவி புரி புச், தனது பதவியை துஷ்பிரயோகம் செய்ததாகவும், நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை கூறியது, காங்கிரஸ் கட்சியும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. இதையடுத்து, மத்திய நிதி அமைச்சகமும், புலனாய்வு அமைப்புகளும் அவர் மீதான விசாரணையை துவங்கின.இதில் ஆர்.இ.ஐ.டி., எனும் ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்டுகளுக்கு சாதகமாக கொள்கை முடிவுகள் எடுத்து தனது கணவருக்கு தொடர்புடைய ‘பிளாக்ஸ்டோன்’ நிறுவனத்துக்கு உதவி செய்ததாக மாதவி புரி புச்…

Read More

டெல்லியில் பிப்.5ம் தேதி தேர்தல் 

டெல்லியில் 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பிப்.5ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். டெல்லியில் 70 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் பிப்.8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜன.10இல் தொடங்கி 17இல் நிறைவடையும்.   ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் பிப்ரவரி.5ம் தேதி இடைத்தேர்தல்

Read More

இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழகத்தை சேர்ந்தவர் நியமனம்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் (இஸ்ரோ) தலைவராக தற்போது சோம்நாத் உள்ளார். இவரது பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இந்த நிலையில், இஸ்ரோவின் புதிய தலைவராக வி. நாராயணனை நியமித்து மத்திய அரசின் நியமனக்குழு நியமனம் செய்துள்ளது.

Read More